மொரட்டுவையிலிருந்து மருதானை நோக்கி கடலோரப் பாதையில் பயணித்த புகையிரதம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 7.50 மணிக்கு மொரட்டுவையிலிருந்து புறப்பட்ட இல.325 என்ற புகையிரதத்தின் இயந்திரத்திலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, தீயணைப்பு துறையினரின் உதவியோடு கொள்ளுபிடிய புகையிரத நிலையத்தில் வைத்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் காரணமாக கடலோரப் பாதையின் புகையிரத சேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என புகையிரத திணைக்கள உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
இன்று காலை 7.50 மணிக்கு மொரட்டுவையிலிருந்து புறப்பட்ட இல.325 என்ற புகையிரதத்தின் இயந்திரத்திலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, தீயணைப்பு துறையினரின் உதவியோடு கொள்ளுபிடிய புகையிரத நிலையத்தில் வைத்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் காரணமாக கடலோரப் பாதையின் புகையிரத சேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என புகையிரத திணைக்கள உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.