விசாரணைகள் ஆரம்பம்...

Thursday, 20 February 2020 - 19:30

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D...
கல்வி சுற்றுலாவின் போது கோமரன்கடவெல பகுதியிலுள்ள மதவாச்சி குளத்தில் மூழ்கி நான்கு மாணவர்கள் பலியான சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம் ரத்நாயக இதனை தெரிவித்துள்ளார்.

பதுளை - ஹாலிஎல விஞ்ஞான கல்லூரியின் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் 68 மாணவர்கள் திருகோணமலை நோக்கி கல்விச் சுற்றுலா சென்றிருந்தனர்.

இதன்போது, சில மாணவர்கள் மதவாச்சி குளத்தில் நீராடச் சென்றனர்.

இதன்போது, சுமார் 7 மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் நான்கு பேர் பலியானார்.

ஏனைய 3 மாணவர்களும் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்.