கல்வி சுற்றுலாவின் போது கோமரன்கடவெல பகுதியிலுள்ள மதவாச்சி குளத்தில் மூழ்கி நான்கு மாணவர்கள் பலியான சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம் ரத்நாயக இதனை தெரிவித்துள்ளார்.
பதுளை - ஹாலிஎல விஞ்ஞான கல்லூரியின் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் 68 மாணவர்கள் திருகோணமலை நோக்கி கல்விச் சுற்றுலா சென்றிருந்தனர்.
இதன்போது, சில மாணவர்கள் மதவாச்சி குளத்தில் நீராடச் சென்றனர்.
இதன்போது, சுமார் 7 மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் நான்கு பேர் பலியானார்.
ஏனைய 3 மாணவர்களும் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம் ரத்நாயக இதனை தெரிவித்துள்ளார்.
பதுளை - ஹாலிஎல விஞ்ஞான கல்லூரியின் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் 68 மாணவர்கள் திருகோணமலை நோக்கி கல்விச் சுற்றுலா சென்றிருந்தனர்.
இதன்போது, சில மாணவர்கள் மதவாச்சி குளத்தில் நீராடச் சென்றனர்.
இதன்போது, சுமார் 7 மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் நான்கு பேர் பலியானார்.
ஏனைய 3 மாணவர்களும் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்.