1000 ரூபா வேதன அதிகரிப்புக்கான முக்கிய பேச்சுவார்த்தை

Friday, 21 February 2020 - 8:02

1000+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பது குறித்த பேச்சுவார்த்தை ஒன்று நேற்றும் இடம்பெற்றது.

அமைச்சர்களான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் ரமேஷ்பத்திரன ஆகியோரும், முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஜனாதிபதியின் அறிவிப்பின் அடிப்படையில் பெருந்தோட்ட தொழிலாளர் வேதனத்தை அதிகரிக்கும்படி அரசாங்கத்தரப்பில் கோரப்பட்டது.

எனினும் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் மீண்டும் அடுத்தவாரம் கூடி பேச முடிவு செய்யப்பட்டப்போதும், திகதி தீர்மானிக்கப்படவில்லை என தெரிய வருகின்றது.