ஆமி சமந்தவை விசாரணை செய்ய காவல்துறையினருக்கு அனுமதி

Friday, 21 February 2020 - 11:18

%E0%AE%86%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப் பொருள் வர்த்தகரான மாகந்துர மதூஷ் உடன் தொடர்பு வைத்திருந்த பாலசிங்க பெலிகே சமந்த எனப்படும் ஆமி சமந்தவை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேகநபர் ஹெரோயின் போதை பொருளுடன் திவுலப்பிட்டிய கடல்கமுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சந்தேகநபர் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து அவரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.