ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

Friday, 21 February 2020 - 13:58

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கான கால வரையறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்றைய தினத்தோடு நிறைவடைந்த குறித்த ஆணைக்குழுவின் காலமானது மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி தொடக்கம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பழிவாங்கல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.