பெரும் நிதி நெருக்கடி

Sunday, 23 February 2020 - 12:50

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF
கடந்த ஒரு தசாப்த காலப்பகுதியினில் முதல் முதலாக சர்வதேச வாநூர்தி நிறுவனங்கள் பெரும் நிதி நெருக்கடியினை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலைக்கு கொரோனா வைரஸ் உயிர்கொல்லியே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், சர்வதேச வாநூர்தி போக்குவரத்து அதிகார சபை தற்போதைய நிலை காரணமாக மேலும் பாரிய நட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தற்போது 29 பில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த தொற்று காரணமாக உலகளாவிய ரீதியாக சுமார் 5 சத வீத வாநூர்தி போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இந்த உயிர்கொல்லி காரணமாக இன்று காலை வரை சர்வதேச ரீதியாக 2 ஆயிரத்து 461 பேரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளதுடன், எழுபத்து எட்டாயிரத்து 767 பேர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.