வாகன விபத்தில் 4 பேர் பலி... மேலும் சிலர் காயம்..!

Sunday, 23 February 2020 - 21:20

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF...++%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..%21
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா - பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் பலியாகினர்.

இன்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்து வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த மருத்துவமனையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கெப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பேருந்துக்கு பிரதேசவாசிகள் தீ வைத்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.