சட்டவிரோதமாக சர்வதேச புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கிய குற்றச்சாட்டில் ஸ்வீடன் புத்தக விற்பனையாளருக்கு சீன நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குய்மின்ஹாய் எனும் ஸ்வீடன் புத்தக விற்பனையாளருக்கே இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவர், விடுமுறையை கழிப்பதற்காக தாய்லாந்து சென்றிருந்த போது காணாமல் போயிருந்தார்.
இந்த நிலையில், சீனாவில் மீட்கப்பட்ட அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து ஸ்வீடன் மற்றும் சீனாவில் மனித உரிமை அமைப்புக்கள் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தன.
எனினும் கைது செய்யப்பட்ட அவர் 10 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்ற
ன.
ன.