இந்த வருடம் பெரும்போக பயிர்செய்கையில் அதிகளவான விளைச்சல் கிடைக்கப்பெறும் என விவசாய திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி, சுமார் 2.97 மில்லியன் மெற்றிக் டன் அரிசி கிடைக்கப்பெறும் எனச் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தத் தடவை பெரும்போகத்தில் 2.4 மில்லியன் மெற்றிக் டன் அரிசி கிடைக்கும் என இதற்கு முன்னர் விவசாயத் திணைக்களம் மதிப்பீடு செய்திருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
இருப்பினும், காலநிலை மாற்றம் மற்றும் ஏனைய காரணிகளை கருத்திற்கொண்டு இந்த விளைச்சல் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.