வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

Wednesday, 26 February 2020 - 15:11

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
6 இலட்சத்து 12 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகக்கள் கட்டுநாயக்கவில் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டன.

சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போதே இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு-வெல்லம்பிடிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேக நபர் 2 மாதங்களுக்கு முன்னர் டுபாய் சென்று நேற்றைய தினம் நாடு திரும்பியதாவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட நபரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுளள்ளன.