மனோவின் ஆதரவு சஜித்திற்கு..! உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

Wednesday, 26 February 2020 - 16:08

%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81..%21+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81
ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான “ஜாதிக ஜன பலவேகய” என்ற புதிய கூட்டணிக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பு தொடர்பில் கட்சியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் எமது செய்திப் பிரிவினரிடம் தெரிவித்தார்.

இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றைய தினம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போது அறிவிக்கப்பட்டது.

இதில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி பிரமுகர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.