2025 ஆம் ஆண்டில் 10 பில்லியன் ரூபாய் இலக்கை எட்டுவதற்காக சுற்றுலாதுறை தொடர்பில் இடம்பெறும் சட்டவிரோத செற்பாடுகள் மற்றும் முறைகேடுகளை தடுப்பதற்காக விரிவான வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
அதேநேரம் சுற்றுலா வலயங்களுக்கு அருகில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக சுற்றுலா காவல்துறையினரின் சேவைகளையும் விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் சுற்றுலா பயணிகளின் சேவை வசதிகளுக்காக புதிய இயைணத்தள பயன்பாட்டையும் அறிமுகப்படுத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.