இதுவரை கைது செய்யப்படாதது ஏன்..!

Tuesday, 07 April 2020 - 21:36

+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D..%21
செவனகல கிரிப்பத்வேவ பிரதேசத்தில் 12 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு சந்தேக நபர்கள் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி பல முறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் 05 பேர் கொண்ட குழு இதனுடன் தொடர்புடையதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி தற்போது ஹம்பாந்தொட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தனமல்வில பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இதனுடன் தொடர்புடையதாகவும் அரசியல் தொடர்பில் அவர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என பிரதேச மக்கள் மேலும் குற்றம் சுமத்தியுள்ளனர்.