சமுர்தி பயனாளித் தெரிவு முறை மாற்றம்

Sunday, 25 January 2015 - 9:17

%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
சமுர்தி பயனாளிகளை தேர்வு செய்யும் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தவுள்ளதாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தங்கல்லையில், நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சமூர்த்தி இயக்கத்தை, முற்றிலும் அரசியலுக்கு மாறுப்பட்டதாக மாற்ற தெளிவான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளேன்.

தகுதியாளர்களுக்கு மாத்திரமே முத்திரைகள் வழங்கப்படும்.

சமூர்த்தி பயனாளிகளை தெரிவு செய்யும் பொறுப்பு இனி அரச அதிகாரிகளுக்கு அல்ல சமூர்த்தி சமூக சங்கத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.

பல வருடங்களாக, தகுதியுள்ள மற்றும் சமூர்த்தி கொடுப்பனவு கிடைக்காது போன சகல வறிய மக்களுக்கும சமூர்த்தி கிடைக்க இதன் மூலம் வாய்ப்பு செய்யப்படும்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips