அனுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடும் அமைச்சர் விஜயதாஷ

Sunday, 01 March 2015 - 8:56

%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B7
எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் விவாதத்துக்கு வருமாறு, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுத்துள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்க வெளியிட்டிருந்த கருத்தொன்றுக்கு பதில் வழங்கும் வகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதி நாட்டில் இருந்து தப்பி செல்வதற்கான உதவிகளை, விஜயதாஸ ராஜபக்ஷ மேற்கொண்டதாக ஜே வி பியின் தலைவர் குற்றம் சுமத்தி இருந்தார்.

நிஷ்ஷங்க சேனாதிபதி நாட்டில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஜனவரி மாதம் 23ம் திகதி அவரின் கடவுச் சீட்டையும் நீதிமன்றம் பறித்திருந்தது.

இந்த நிலையிலேயே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips