பிரதான சந்தேக நபர் நீதிமன்றில் சரண்

Tuesday, 31 March 2015 - 19:54

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D
ரத்கம பிரேதச சபை தலைவர் மனோஜ் புஸ்பகுமார கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் களுத்துறை நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

பொடி லெசியா என்று அழைக்கப்படும் ஜனித் மதுசாங்க சில்வா இன்று நீதிமன்றில் முன்னிலையான நிலையில், அவரை ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, பிரதேச சபையின் தலைவரது கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க காலி நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 23ஆம் திகதி இரவு ஹிக்கடுவ பிரதேசத்தின் சுற்றுலா விருந்தகம் ஒன்றில் வைத்து ரத்கம பிரதேச சபையின் தலைவர் கொலை செய்யப்பட்டார்.

இதன்போது பிரதேச சபையின் தலைவரது நண்பர்கள் இருவரும் கடுமையான காயங்களுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips