மிக் வானூர்தி கொள்வனவு தொடர்பில் முன்னாள் இராணுவ தளபதி எயார் ஷீப் மார்சல் டொனால்ட் பெரேராவிடம் நிதி மோசடி தவிர்ப்பு பிரிவு விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்த மிக் வானூர்தி கொள்வனவு தொடர்பில் முன்னாள் வான்படை தளபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு படையணிகளின் தலைமை அதிகாரி ஏயார் ஷீப் மார்ஷல் ரோஷான் குணத்திலக்கவிடமும் கடந்த 27ஆம் திகதி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வானூர்தி கொள்வனவு கடந்த 2006ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், எயார் ஷீப் மார்சல் டொனால்ட் பெரேரா 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டு வரையில் இராணுவ தளபதியாக கடைமைபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Update : Wednesday, 01 April 2015 - 14:09
---------------------------------------------------
ஏயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேராவிடம் விசாரணை
கூட்டுப் படைகளின் முன்னாள் தளபதியும், விமானப் படையின் முன்னாள் தளபதியுமான ஏயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேராவிடம் நிதி மோசடி விசாரணை பிரிவினர் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிக் விவகாரம் தொடர்பாகவே இவ் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஹெஜிங் விவகாரம் தொடர்பாக நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜெயசுந்தரவிடம் நிதி மோசடி விசாரணை பிரிவினர் நேற்று விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
இந்த விசாரணை சுமார் நான்கரை மணி நேரம் இடம் பெற்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் ஹெஜிங் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் நேற்று விசாரணை இடம்பெற்றிருந்தது.
முன்னாள் அரசில் பதவி வகித்த பல முக்கியஸ்தர்களிடம் மேற்படி மோசடிகள் தொடர்பாக தொடர்ச்சியாக விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த மிக் வானூர்தி கொள்வனவு தொடர்பில் முன்னாள் வான்படை தளபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு படையணிகளின் தலைமை அதிகாரி ஏயார் ஷீப் மார்ஷல் ரோஷான் குணத்திலக்கவிடமும் கடந்த 27ஆம் திகதி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வானூர்தி கொள்வனவு கடந்த 2006ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், எயார் ஷீப் மார்சல் டொனால்ட் பெரேரா 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டு வரையில் இராணுவ தளபதியாக கடைமைபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Update : Wednesday, 01 April 2015 - 14:09
---------------------------------------------------
ஏயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேராவிடம் விசாரணை
கூட்டுப் படைகளின் முன்னாள் தளபதியும், விமானப் படையின் முன்னாள் தளபதியுமான ஏயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேராவிடம் நிதி மோசடி விசாரணை பிரிவினர் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிக் விவகாரம் தொடர்பாகவே இவ் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஹெஜிங் விவகாரம் தொடர்பாக நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜெயசுந்தரவிடம் நிதி மோசடி விசாரணை பிரிவினர் நேற்று விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
இந்த விசாரணை சுமார் நான்கரை மணி நேரம் இடம் பெற்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் ஹெஜிங் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் நேற்று விசாரணை இடம்பெற்றிருந்தது.
முன்னாள் அரசில் பதவி வகித்த பல முக்கியஸ்தர்களிடம் மேற்படி மோசடிகள் தொடர்பாக தொடர்ச்சியாக விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories