சிறுநீரக தொகுதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துக்கு தடை

Friday, 22 May 2015 - 18:12

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88
 
சிறுநீரகத்தொகுதிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக சந்தேகிக்கப்படும் "க்ளைபோஸெட்" கிருமிநாசினியின் இறக்குமதியை தடை செய்யவிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

அனுராதபுரம் மாவட்டத்தில் அதிக அளவானவர்களுக்கு சிறுநீரக தொகுதி தொடர்பான நோய் ஆரம்பத்தில் அவதானிக்கப்பட்டிருந்தது.

பின்னர் இது முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவி இருப்பதாக அண்மையில் தெரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips