றகர் வீரர் வசீம் தாஜூதீனின் சடலம் புதைக்கப்பட்டுள்ள தெஹிவளை - வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள மயானத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக தெஹிவளை பொலிஸ் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த மரணம் , கொலை என தற்போது உறுதியாகியுள்ளது. மேலும் தற்போது அரசியல் மேடைகளிலும் இது தொடர்பில் பரவலாக பேசப்படுகின்றது.
தாஜூதீன் கொல்லப்படுவதற்கு முன்னர் கடுமையான சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Follow US
Most Viewed Stories