சுசில் மற்றும் அனுரவுக்கு எதிரான மனுக்கள் மீளப்பெறப்பட்டன

Friday, 28 August 2015 - 12:07

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றின் முன்னாள் பொது செயலாளர்களுக்கு எதிராக, நடப்பு பொது செயலாளர்களால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுகள் மீளப்பெறப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜெயந்த நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக விஷ்வா வர்ணபால நியமிக்கப்பட்டார்.

அத்துடன் சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் பதவியில் இருந்து அனுரபிரியதர்சன யாப்பா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தற்காலிக தலைவராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டிருந்தார். 

இந்த நிலையில் தங்களின் கட்சி கடமைகளை முன்னெடுப்பதற்கு இடமளிக்குமாறு கோரி, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் சுசில் பிரேமஜெயந்த மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோருக்கு எதிராக துமிந்த திஸாநாயக்க மற்றும் விஷ்வா வர்ணபால ஆகியோர், மனுத்தாக்கல் செய்திருந்தனர். 

எவ்வாறாயினும், சுசில் பிரேமஜெயந்த ஏற்கனவே தமது பதவியில் இருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்த நிலையில், இந்த மனுக்களை மீளப்பெறுவதாக மனுதாரர்கள் அறிவித்துள்ளனர்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips