மண்சரிவு - இந்தியாவிடம் அமைச்சர் திகாம்பரம் கோரிக்கை

Tuesday, 06 October 2015 - 21:15

%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+-+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
மலையக பிரதேசங்களில் மண் சரிவினால் சுமார் 5 ஆயிரத்து 500 குடும்பங்கள் பாதிக்கப்படலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய அரசாங்கம் பெருந்தோட்ட மக்களுக்கு நிர்மாணித்துக் கொடுக்கவிருக்கும் வீடுகளில் சுமார் 4 ஆயிரம் வீடுகளை, மண்சரிவு ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்கு நிர்மாணித்துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைக்கு இந்திய அரசாங்கத்தின் தரப்பில் இருந்து விரைவில் பதிலை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொத்மலை கயிறுகட்டி பெருந்தோட்டத்தில் அண்மையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று இடம்பெற்ற போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

மண்சரிவால் மலையகத்தின் பல பகுதிகளிலும் மக்கள் ஆபத்துடன் இருக்கின்ற போது அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியது மனிதாபிமான செயற்பாடாக இருக்கும்.

இந்த நிலையில், கிராமங்கள் அமைக்கும் திட்டமும் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் திகாம்;பரம் இதன்போது தெரிவித்தார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips