கொட்டதெனிய சேயா சிறுமியிடம் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் பெறப்பட்ட மரபணுவும், கொண்டயாவின் மரபணுவும் பொருந்தவில்லை என குற்றவிசாரணை திணைக்களம் அறிவித்துள்ளது.
பொரள்ளையில் உள்ள ஜீன்டெக் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட மரபணுப் பரிசோதனையின் ஊடாக இந்த விடயம் தெரியவந்துள்ளதாக மினுவாங்கொடை நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
மினுவாங்கொட நீதவானிடம் குறித்த மரபணு அறிக்கையை குற்றத்தடுப்பு பிரிவினர் கையளித்துள்ளனர்.
எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கொண்டையாவையும், அவரது மூத்த சகோதரனையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories