தமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த 73 இலங்கையர்கள் நேற்றைய தினம் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.
இந்த தகவலை இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலனாவர்கள், 1990 ஆம் ஆண்டு கடல்மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச் சென்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்காக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையகம் உதவி வழங்கியுள்ளது.
இதேவேளை, குறித்த ஆணையகத்தின் உதவியுடன் 2002 ஆம் ஆண்டு முதல் கடந்த வருடம் வரை இந்தியாவில் இருந்து சுமார் 12 ஆயிரத்து 500 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
Follow US
Most Viewed Stories