உண்மையை நிலைநாட்ட ஊடக சுதந்திரம் பயன்பட வேண்டும் - ஜனாதிபதி

Friday, 09 October 2015 - 19:18

%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF
வழங்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரத்தை உண்மையை நிலைநாட்டுவதற்கு மாத்திரம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் 60வது வருட நிறைவை முன்னிட்டு, கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

வெள்ளை வானில் கடத்தப்பட்டமை, காணாமல் போகச் செய்யப்பட்டமை, அச்சுறுத்தலுக்கு உள்ளானமை, ஊடக நிறுவனங்களுக்கு அரசியல் வாதிகள் தொலைபேசியில் அழைத்து அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் அழுத்தம் கொடுத்தமை என்பன கடந்த கால அரசாங்கத்துடன் போய்விட்டது.

தற்போது ஊடகவியலாளர்களுக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி உண்மையை முழுமையாக வெளிக் கொணர ஊடகங்கள் முயற்சிக்க வேண்டும்.

மாறாக அரசியல்வாதிகள்மீது சேறுபுசும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips