களனி தொடருந்து பாதைக்கு அருகாமையில் குடியிருப்பவர்களை புதிய பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தற்போது அங்கு வசிக்கும் ஆயிரத்து அறுநூறுக்கும் அதிகமான குடும்பங்களை புதிய இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தொடருந்து பாதைகளை அண்டியுள்ள குடியிருப்புக்கள் சட்ட விரோதமாக நிர்மாணிக்கப்பட்டள்ளதாக தெரிவித்த அவர், இதன் காரணமாக தொடருந்து போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் தொடருந்து திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளில் தொடர் மாடி வீடுகளை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories