ரஷ்யாவைச் சேர்ந்த பெண் எம்.பி. ஒகாசனா போப்ரோவ்ஸ்கயா மற்றும் அவரது கணவன் ஆகியோர் வெடிகுண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளனர்.
ஒகாசனா போப்ரோவ்ஸ்கயா அந்நாட்டின் ஜனாதிபதி புடினின் ஐக்கிய ரஷ்யா கட்சியைச் சேர்ந்தவர். இவரது கணவர் நிகிடா போப்ரோஸ்கி. இவர் முன்னாள் இராணுவ சிறப்பு சேவை அதிகாரி. இவர்கள் சைபீரியாவில் உள்ள நொவோசி பிர்ஸ்க் என்ற இடத்தில் தங்கியிருந்தனர்.
குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது கணவன்- மனைவி இருவரின் உடல்களும் காரின் பின் இருக்கையில் அரை நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளன.இவர்கள் காருக்குள் உறவில் ஈடுபட்டபோது குண்டு வெடித்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்துக்கு பெண் எம்.பி.யின் கணவரே காரணமென தெரிவிக்கப்படுகின்றது. ஏனெனில் இவர் கையில் வெடிகுண்டை வெடிக்க செய்யும் வயர் இருந்தது. அதனை உறவின் போது வெடிக்க செய்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கணவன்-மனைவிக்கு இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பெண் எம்.பி. ஒகாசனாவை காரில் அழைத்து வந்து வெடி குண்டை காட்டி மிரட்டி கட்டாயப்படுத்தி உறவு வைத்திருக்கலாம் எனவும் இதன்போது அவர் குண்டை வெடிக்க செய்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
மேலும் ஒகாசனா போப்ரோவ்ஸ்கயா வெறொரு பணக்கார வர்த்தகருடன் உறவைப் பேணி வந்த தாகவும் , இதனைப் பொருத்துக்கொள்ள முடியாத கணவன் இவ்வாறு முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இருவரும் உயிரிழந்தைத் தொடர்ந்து அவர்களது பிள்ளை அனாதையாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
Follow US
Most Viewed Stories