காலி மற்றும் கிருலப்பனை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட மேதின கூட்டங்கள், நாடகங்களே என்று ஜே வி பி தெரிவித்துள்ளது.
பி.ஆர்.சி மைதானத்தில் நடைபெற்ற ஜே வி பியின் மேதின கூட்டத்தில் வைத்து, அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
காலியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினதும், கிருலப்பனையில் மகிந்த அணியினரும் தங்களின் மேதினக் கூட்டங்களை நடத்தி இருந்தனர்.
இதில் ஒரு குழுவினர் பாம்பின் தலைப் பகுதியையும், மற்றைய குழுவினர் பாம்பின் வால் பகுதியையும் பாதுகாத்திருந்தனர்.
பாம்பின் வால் பகுதியை பாதுகாத்தவர்கள் அதற்கு தலை பிறக்கும் என்றும், தலைப் பகுதியை பாதுகாத்தவர்கள் அதற்கு வால் பிறக்கும் என்றும் நம்பி இருந்தனர்.
ஆனால் வேறெங்கோ இருந்து வரும் கொக்கு ஒன்று அந்த இரண்டு துண்டங்களையும் கௌவிக் கொண்டு சென்றுவிடும் என்பதை அவர்கள் அறியாதுள்ளனர் என்று அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories