காலி - மாத்தறைக்கு இடையிலான புகையிரத சேவை நிறுத்தப்படவுள்ளது...?

Wednesday, 04 May 2016 - 10:20

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF+-+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81++%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81...%3F
காலி மற்றும் மாத்தறைக்கிடையிலான புகையிரத சேவை,  இந்த மாதம் 07 ஆம் 08 ஆம் திகதியில் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

காலி மற்றும் தல்பே புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள கடுகொட பாலத்தில், பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, எதிர்வரும் 6 ஆம் திகதி இரவு 9 மணி தொடக்கம், காலி - மாத்தறைக்கு இடையிலான புகையிரத சேவை தற்காலிகமாக  நிறுத்தப்படுவதுடன், எதிர்வரும் 9 ஆம் திகதி அதிகாலை மீண்டும் சேவையில் இணைக்கப்படவுள்ளதாக புகையிரத சேவை  பொது முகாமையாளர் நாலக பண்டார எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கொழும்பு தொடக்கம் காலி வரை , மற்றும் காலி தொடகம் கொழும்பு வரை பயணிக்கும் புகையிரதம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips