ஈழத் தமிழர்கள் விடயம் தேர்தலுக்காக அல்ல – தங்கபாலு

Wednesday, 04 May 2016 - 13:05

%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E2%80%93+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81
ஈழத் தமிழர்களின் விடயம் தமிழகத்தில் தேர்தலை நோக்காக கொண்டு பேசப்படவில்லை என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்துள்ளார். 

2009ம் ஆண்டு ஈழத் தமிழர்களின் பிரச்சினை உச்ச கட்டத்தில் இருந்த போதும் கூட, அந்த ஆண்டு நடைபெற்ற லோக் சபா தேர்தலின் நிமித்தம் இந்த விடயம் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். 

அதன் பின்னர் ஈழத் தமிழரின் விடயம் பின்தள்ளப்பட்டிருந்தது.

எனினும் மீண்டும் 2011ம் ஆண்டு தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது இந்த விடயம் பேசப்பட்ட போதும், அது தேர்தல் சார்ந்த விடயமாக எப்போதும் இருந்ததில்லை என்று அவர் கூறியுள்ளார். 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips