சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
அதேவேளை வீடுகள் சேதமடைந்த மக்களுக்கு 1 லட்சம் ரூபா தொடக்கம் 25 லட்சம் ரூபா வரையில் நட்ட ஈடு வழங்கப்படவுள்ளது.
இதற்கான சுற்றுநிருபம் இன்று வெளியிடப்படவுள்ளதாகவும், இது தொடர்பான நடவடிக்கைகள் எதிர்வரும் 2 வாரங்களில் நிறைவு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Follow US
Most Viewed Stories