யாழ்பாணத்தில் ஆயுதங்களுடன் மேலும் இருவர் கைது..

Tuesday, 24 May 2016 - 9:19

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
யாழ்ப்பாணம் கந்தரோடை மற்றும் தெல்லிப்பழை பகுதியில் வைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட முயன்றார்கள் எனும் சந்தேகத்தில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவர்கள் இருவரும் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் கைது செய்யப்பட்ட ரொக்டீமுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வாள்கள் இரண்டும், கையடக்க  தொலைபேசிகள் இரண்டினையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலைகள் இரண்டினது மாணவர்கள் என்பதுடன் எதிர்வரும் ஆண்டு பரீட்சைக்கு தோற்ற இருப்பவர்கள் எனவும் காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips