மட்டக்களப்பு, ஐயங்கேணி ரெட்பானாபுரம் கிராமத்தில் பாழடைந்த காணி ஒன்றிலிருந்து இருந்து நேற்று இரவு கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
ரெட்பானாபுரம் வீதியிலுள்ள பாழடைந்த காணியில் மட்பாண்டம் சூளையிடுவதற்காக பெண்கள் குழியொன்றைத் தோண்டும் போது இந்தக் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஏறாவூர் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் ஸ்தலத்திற்கு விரைந்து கைக்குண்டை மீட்டனர்.
Follow US
Most Viewed Stories