ஹப்புத்தளை தோட்டப்பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தோட்டப்பகுதியில் பணி புரிந்து கொண்டிருந்த 9 பெண் பணியாளர்களே இந்த குளவிக் கொட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சாமிமலை ஹோல்டன் கீழ் பிரிவில் பணி புரிந்துகொண்டிருந்த 8 தொழிலாளர்கள் குளிவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தற்சமயம் மஸ்கேலியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதேவேளை குறித்த தோட்டத்தின் தொழிற்சாலைப்பிரிவில் பணிபுரிந்துகொண்டிருந்த ஐந்து தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories