அக்குரஸ்ஸ, பிட்டபெத்தர, தெரங்கல பிரதேசத்தில் 13 வயது சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 7 பேர் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மொரவக்க நீதவான் முன் நேற்று அவர்களை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆம் திகதி குறித்த சிறுமியை காணவில்லை என அவரின் தாய் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர் மேற்கொண்ட விசாரணைகளில் போது சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் மற்றும் கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபர்களும் அக்குரஸ்ஸ, மாத்தறை, நெலுவ மற்றும் நிட்டம்புவ பிரதேசங்களில்
வைத்து குறித்த சிறுமியை பல முறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
தொழில்நுட்ப தகவலுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர், விடுதி உரிமையாளர் உட்பட குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
மொரவக்க நீதவான் முன் நேற்று அவர்களை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆம் திகதி குறித்த சிறுமியை காணவில்லை என அவரின் தாய் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர் மேற்கொண்ட விசாரணைகளில் போது சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் மற்றும் கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபர்களும் அக்குரஸ்ஸ, மாத்தறை, நெலுவ மற்றும் நிட்டம்புவ பிரதேசங்களில்
வைத்து குறித்த சிறுமியை பல முறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
தொழில்நுட்ப தகவலுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர், விடுதி உரிமையாளர் உட்பட குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
Follow US
Most Viewed Stories