பிறந்த குழந்தைக்கு ஒக்சிசனுக்கு பதிலாக சிரிப்பூட்டும் வாயு செலுத்தியதால் பரிதாபமாக பலி...

Wednesday, 27 July 2016 - 10:23

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF...
அவுஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் புதிதாக பிறந்த 2 குழந்தைகளுக்கு ஒக்சிசன் வாயு செலுத்துவதற்கு பதிலாக தவறுதலாக நைட்ரஸ் ஆக்சைடு (சிரிப்பூட்டும் வாயு) செலுத்தி விட்டனர்.

இதில் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மற்றொரு குழந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜில்லியன் ஸ்கின்னர் கூறும்போது, ' இந்த சம்பவம் மிகுந்த வேதனையை தருகிறது. இது துயரமான ஒரு தவறு. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்' என்றார்.

அந்த மருத்துவமனையில் ஒக்சிசன் வாயு வரவேண்டிய குழாயில் நைட்ரஸ் ஆக்சைடு வந்ததுதான் இந்த தவறுக்கு காரணம் என கூறப்படுகிறது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips