மதுபோதையில் பேரூந்தை செலுத்திய சாரதிக்கு 3 மாத சிறைத்தண்டனை...

Tuesday, 23 August 2016 - 17:03

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+3+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88...
மதுபோதையில் பயணிகள் பேரூந்தை செலுத்திய தனியார் பேருந்து சாரதி ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இன்று காலை 50 பயணிகளுடன் புறக்கோட்டையிலிருந்து ஹோமாகம நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
 
ஏனைய வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பயணித்த குறித்த பேருந்து கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் நிறுத்தப்பட்டுள்ளது.
 
இதன்போது, மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது சாரதி மது அருந்தி இருந்தமை தெரியவந்தது.
 
கைதுசெய்யப்பட்ட சாரதி இன்றைய தினம் புதுக்கடை 7 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
 
இதற்கமைய அவருக்கு 7 ஆயிரத்து 500 ரூபா அபராதமும் மூன்று மாத கால கட்டாய சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips