எக்னெலிகொட வழக்கு - சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்...

Wednesday, 24 August 2016 - 16:13

%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+-+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இருவரினதும் விளக்கமறியல் காலம் ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரியவர்கள் இன்று அவிசாவளை மேல் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட போதே, நீதிபதி இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை. எனவே சந்தேகத்திற்குரியவர்களுக்கு பிணை வழங்க வேண்டாம் என ரகசிய காவல்துறையினர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இதன்படி, சந்தேகத்திற்குரியவர்களை மேலும் இரண்டு மாதங்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips