நீதிமன்றங்களின் செயற்பாடுகள் மற்றும் நீதிபதிகள் தொடர்பில் ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் நீதிமன்ற சுயாதீனத் தன்மைக்கு சவாலாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறாக செயற்படும் ஊடகங்களுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜெஃப்ரி அழகரத்திணம் குறிப்பிட்டார்.
இதேவேளை சில நீதிபதிகளின் தொலைபேசிகள் இரகசியமான முறையில் ஒட்டுக்கேட்கப்படுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories