இஸ்ரேலிய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பலஸ்தீன பெண்ணின் உறவினர்கள் அப்பெண்ணால் படையினருக்கு எவ்வித அச்சுறுத்தலுத்தலும் நிலவ வில்லை என தெரிவித்துள்ளனர்.
23 வயதான ராஹிக் சாஜி மொஹமட் பீரவி என்ற அப்பெண் இவ்வருட ஆரம்பத்திலேயே அமெரிக்க பிரஜையொருவரை மணம் முடித்துள்ளார்.
உறவினர்களைப் பார்க்கத் தாயகம் திரும்பிய காலப்பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவர் உயிரிழந்த பின்னரும் அவர் மீது ஈவிரக்கமற்ற முறையில் இஸ்ரேலிய படையினர் துப்பாக்கியால் சுட்டக் காணொளியும் தற்போது வெளியாகியுள்ளது.
அவரது உடலை இஸ்ரேலிய படையினர் இதுவரை ஒப்படைக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் தம்மீது தாக்குதல் நட த்த முயன்ற போதே இவ்வாறு சுட்டுக்கொன்றதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
Follow US
Most Viewed Stories