அவுஸ்திரேலியாவில் ஈழ அகதிகள் மீது இனப்பாகுபாடு!!

Tuesday, 25 October 2016 - 15:46

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%B4+%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%21%21
அவுஸ்திரேலியாவில் ஈழ அகதிகள் மீது இனப்பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற அகதிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு 2012ம் ஆண்டுக்கு பின்னர் அமுலாக்கப்பட்ட விதிமுறைகளால் அகதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் அகதிகளுக்கு இணைப்பு வீசா என்ற பெயரில் வழங்கப்படுகின்ற தற்காலிக வீசாவின் ஊடாக அங்கு தொழில்புரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும் அவர்கள் தங்களுக்கு இடையிலான தொடர்புகளை அவர்களைப் போன்ற அகதிகளுடனேயே பேண வேண்டி நிலை காணப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் அவர்கள் இனரீதியாக பாகுபடுத்தப்பட்டு வேறுபடுத்தப்படுகின்றனர்.

இது மிகப்பெரிய சிக்கலான விடயமாக இருப்பதாக குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips