அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வடக்கில் முழு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.
இதற்கு அரச ஸ்தாபனங்கள் , தனியார்கள் நிறுவனங்கள் என அனைத்தும் தமது ஆதரவை வழங்கியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
எனினும் இந்நிலையில், பருத்தித்துறை பகுதியில் மதுபான விற்பனை நிலையமொன்று திறந்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
இது மக்களை பெரிதும் விஷனத்துக்குள்ளாக்கியிருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
மாணவர்களின் மரணத்துக்கு நீதிகோரி வடக்கு முழுவதும் ஸ்தம்பித்திருந்த நிலையில் மதுபானக்கடை மாத்திரம் இவ்வாறு திறந்திருந்தமை பலரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
சூரியன் செய்தி பிரிவின் பிராந்திய செய்தியாளர்
Follow US
Most Viewed Stories