முறி விநியோகத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த உண்மையான விடயங்கள் வெளியாகும் - சுனில்

Wednesday, 26 October 2016 - 6:57

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
கோப் குழுவின் அறிக்கை வெளியாகும் போது மத்திய வங்கியின் முறி விநியோகத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த உண்மையான விடயங்கள் வெளியாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துநெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன மகேந்திரனை பாதுகாப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் முயற்சித்ததாகவும் சுனில் ஹந்துநெத்தி குற்றம் சுமத்தினார்.

இதற்கு பதில் வழங்கிய பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா, ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் யாரையும் பாதுகாக்க முயற்சிக்கவில்லை என்று கூறினார்.

மேலும் இந்த விசாரணைகள் நியாயமான முறையில் இடம்பெற வேண்டும் என்றே தாங்கள் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips