நுளம்பு குடம்பிகளுடனான சூழலை கொண்டிருப்பவர்களுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்க தம் யோசனை முன்வைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு குறித்த திருத்தச் சட்டம் அவசியம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எந்தவொரு பகுதியிலும் டெங்கு தொற்றினால் ஒருவர் மரணத்தால், டெங்கு நுளப்பு குடம்பியை பரவலடையச் செய்தவர் அல்லது நிறுவனத்தினால் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
டெங்குத் தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் குறித்து ஆராயும் பொருட்டு நேற்று கம்பஹா சுகாதார சேவை பணிமலைக்கு நேற்று விஜயம் செய்த சுகாதார அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை கொண்டிருப்பவர்களுக்கு, தற்போது 2 ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் ரூபா வரையில் அபராதம் விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories