தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கைகள் தொடர்பில் நிபுணர்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கை ஆரம்பம்...

Wednesday, 07 December 2016 - 15:26

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D...
சட்டமூலமாக்கப்படவுள்ள ​தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கைகள் தொடர்பில் நிபுணர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போதைய நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிக்கையொன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் , இலங்கை காவற்துறை, சட்டமா அதிபர் திணைக்களம் , நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் , நீதிமன்றம், கல்வித்துறை , தொழிலாளர்கள் மற்றும் சுகாதார பிரிவின் நிபுணர்களின் கருத்துக்களையும் எதிர்ப்பார்ப்பதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

இதுதவிர, அரசார்பற்ற அமைப்புக்களிடமிருந்து நிபுணத்துவ கருத்துக்கள் பெற்று கொள்ளப்படவுள்ளன.
 
இறுதியாக மக்கள் கருத்துக்கள் பெற்று கொள்ளப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips