முறைப்படி ஜெயலலிதாவின் உடலை எரிக்காதது ஏன்? வெளியான புதிய தகவல்கள்...

Wednesday, 07 December 2016 - 15:37

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%3F+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிராமண இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவரது மூதாதையர்கள் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

பொதுவாக பிராமணர்கள் இனத்தில் ஒருவர் மரணம் அடைந்து விட்டால் வைதீக முறைப்படி அனைத்து விதமான சாஸ்திர - சம்பிர தாயங்களை கடை பிடிப்பார்கள். உயிரிழந்த அந்த ஆத்மா மேன்மை பெற ஹோமப் பரிகாரங்களும் செய்வதுண்டு.

இத்தகைய இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு உடலை எரித்து விடுவார்கள். மரித்த ஆத்மாவால் வேறு எந்த பிரச்சினைகளும் ஏற்பட்டு விடக்கூடாது என்ப தற்காகவும், அந்த ஆத்மா மிக எளிதாக மறுபிறவி எடுப்பதற்காகவும் உடலை எரித்து விடும் சம்பிரதாயத்தை பிராமணர்கள் கடை பிடிக்கிறார்கள்.

ஆனால் இந்த சம்பிரதாயத்துக்கு மாறாக ஜெயலலிதாவின் உடல் நேற்று எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இது பிராமணர்களிடம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து ஜெயலலிதா உடல் ஏன் தகனம் செய்யப்பட வில்லை என்ற கேள்வி எழுந்தது. அதற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது.

ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டதற்கு முதன்மையான காரணமாக “நினைவிடம்.” ஏற்படுத்த வேண்டும் என்ற கட்சியின் முடிவே காரணமாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு தற்போதும் கிராமப் பகுதிகளில் உள்ள அ.தி.மு.க.வின் தீவிர விசுவாசிகள் வந்து வணங்கி, வழிபட்டு செல்வதை காணலாம்.அத்தகைய சூழலை ஏற்படுத்த ஜெயலலிதாவுக்கும் நினைவிடம் அமைக்க ஏகமனதாக தீர்மானிக்கப் பட்டது. எனவே தான் ஜெயலலிதா உடலை எரிக்காமல் அடக்கம் செய்துள்ளனர்.

அடக்கம் செய்த காரணத்தால் சாஸ்திர - சம்பிரதாய ரீதியாக ஏதேனும் குறைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான், ஜெயலலிதா உடல் சந்தனப் பேழைக்குள் வைக்கப்பட்டதும் பரிகார சடங்குகளை ஒரு அய்யர் மூலம் செய்ததாக கூறப்படுகிறது. தண்ணீர், பால், பூக் களை ஜெயலலிதா உடலைச் சுற்றி அவரது அண்ணன் மகன் தீபக் ஜெயக்குமார் மூலம் தூவ செய்து இந்த பரிகாரங்கள் நடந்தன.

முன்னதாக ஜெயலலிதா உடல் அப்பல்லோ மருத்துவ மனையில் இருந்து போயஸ் கார்டன் இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டதும் வைதீக சடங்குகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப் படையிலேயே ஜெயலலிதா உடலுக்கு பச்சை நிற சேலை அணிவிக்கப்பட்டது.

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த முக்கியமான ஒருவர், ஜெயலலிதா உடல் எரிக்கப்படாததால் வைதீக முறையில் என்னென்ன பரிகாரங்கள் செய்யப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறியதாக தெரிகிறது. அந்த ஆலோசனை அடிப்படையில் அனைத்து பரிகார சடங்குகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

அதன் பேரிலேயே ரத்த உறவு முறையிலான ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மூலம் சில முக்கிய சடங்குகள் நடத்தப்பட்டன. இது நிச்சயம் ஜெயலலிதா ஆத்மாவை சாந்தப்படுத்தும் என்று ஆன்மீகப் பெரியோர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க. தொண்டர்கள் காலம், காலமாக ஜெயலலிதா நினைவிடத்தில் ஆத்மார்த்தமாக வழிபட வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில்தான் அ.தி.மு.க. முடிவுபடி ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப் பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips