பாதுகாப்புப் படைகள் வலுப்படுத்தப்படுமே தவிர ஒருபோதும் வலுவிழக்க செய்யப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.
பாதுகாப்பு அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.
இதேவேளை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக மின்சார வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்ட போதும் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றுப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இதனை தெரிவித்தார்.
இதற்கு பதில் வழங்கிய மின்சக்தி பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா, யுத்தத்தால் சொத்துக்களை இழந்த, மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு மாத்திரமே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.
டிசம்பர் 31 ஆம் திகதியுடன் இந்த திட்டம் முடிவடைகிறது.
இன்னும் நான்காயிரம் வீடுகளுக்கே மின்சார விநியோகம் வழங்கப்பட வேண்டியுள்ளது.
யுத்தத்தால் வீடுகளை இழந்து மீள்குடியேற்றப்பட்டவர்களே இந்த திட்டத்திற்குள் உள்வாங்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட அனைவருக்கும் மின்சார விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த ஆட்சியில் நிகழ்ந்த விடயங்களே இந்த ஆட்சியிலும் இடம்பெறுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபிக் தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories