48 பேரின் உயிரை காவு வாங்கிய பாகிஸ்தான் விமான விபத்து தொடர்பில் சந்தேகம்!

Thursday, 08 December 2016 - 12:02

48+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21
பாகிஸ்தானில் நேற்று விபத்துக்குள்ளான விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் விமானியால் எச்சரிக்கை  அழைப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

விமானத்துடனான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்னர் இந்த எச்சரிக்கை விடுக்கும் அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் வௌிப்படுத்தியுள்ளனர்.

விமானத்தின் இயந்திர கோளாறு தொடர்பில் விமானி இதன் போது கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத் நகரத்தை நோக்கி பயணித்த இந்த விமானம் நேற்று விபத்துக்குள்ளான நிலையில் , அதில் பயணித்த 48 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் ,விபத்து ஏற்பட்டதற்கான அதிகாரபூர்வ தகவல் இன்னும் உறுதியாக வௌிவராத நிலையில் , விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips