இறக்குமதி செய்யப்படும் அரிசி 1 கிலோ கிராம், 76 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்ய முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வறட்சியின் இடையே மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட விஷேட ஜனாதிபதி செயலணியுடன் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனியார் வர்த்தகர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களும் தேவைக்கு ஏற்ப அரிசி விலையை அதிகரித்து மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்க முடியாது என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அரிசி இறக்குமதியின் போது நுகர்வுக்கு பொருத்தமான அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் பொறுப்புடன் இருக்க வேண்டும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன் அரச களஞ்சியசாலைகளில் இருந்து விநியோகிக்கப்பட்டுள்ள நெற் தொகை, அரிசியாக மாற்றி சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளதா என ஆராய்ந்து அறிக்கை ஒன்றை பெற்று தருமாறு ஜனாதிபதி இதன்போது நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு அறிவித்துள்ளார்.
வறட்சியின் இடையே மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட விஷேட ஜனாதிபதி செயலணியுடன் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனியார் வர்த்தகர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களும் தேவைக்கு ஏற்ப அரிசி விலையை அதிகரித்து மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்க முடியாது என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அரிசி இறக்குமதியின் போது நுகர்வுக்கு பொருத்தமான அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் பொறுப்புடன் இருக்க வேண்டும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன் அரச களஞ்சியசாலைகளில் இருந்து விநியோகிக்கப்பட்டுள்ள நெற் தொகை, அரிசியாக மாற்றி சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளதா என ஆராய்ந்து அறிக்கை ஒன்றை பெற்று தருமாறு ஜனாதிபதி இதன்போது நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு அறிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories