அனுராதபுரம் - தலாவ – பகுதியில் 17 வயதான இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.மேலும் இருவர் காயமடைந்தனர்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலை தொடர்பில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், அவரும் காயமடைந்துள்ள காரணத்தினால் அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
Follow US
Most Viewed Stories