களுத்துறை - கட்டுக்குருந்த படகு விபத்தில் காணாமல்போனவர்களில் இரண்டு பேரின் உடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, குறித்த படகு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் நான்கு பேர் காணாமல்போயிருந்தனர்.
இந்த நிலையில், பலப்பிட்டிய கடற்பகுதியில் மிதத்துகொண்டிருந்த நிலையில், 7 வயது சிறுவனின் உடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, 28 வயதுடைய ஒருவரின் உடலம் இன்று அதிகாலை பேருவளை கடற்பகுதியில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories